சனி, ஆகஸ்ட் 13, 2011

சுதந்திர தின அணிவகுப்பு தடை எதிரொலி: நீதிமன்றம் சென்றது கேரள பாப்புலர் ஃப்ரண்ட்

0 comments
freedom parade2
மழையாளத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
கொச்சி: கேரள பாப்புலர் ஃப்ரண்டின் மாநிலக்குழு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 4 இடங்களில் நடக்கவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு கேரள காவல்துறையினர் தடை விதித்தனர். இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மனு ஒன்றை அளித்துள்ளது. இதன் விசாரணை நாளை எடுத்துக்கொள்ளப்படுகிறது.

சமச்சீர் கல்வியை போராடி பெற்ற மாணவர்களுக்கு கேம்பஸ் ஃப்ரண்டின் வாழ்த்துக்கள்

0 comments
சென்னை: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தமிழ் நாடு அரசு இன்னும் 10 தினங்களுக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை விநியோகித்து முடிக்க வேண்டும் என்றும், உடனே சமச்சீர் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது. சமச்சீர் கல்விக்காக மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

மலேகான் குண்டுவெடிப்பு:முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாசல் திறக்கிறது

0 comments

மும்பை:2006-ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட நிரபராதிகளான ஒன்பது முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அடுத்தவாரம் மும்பை மோக்கா நீதிமன்றத்தில் இவர்களின் மீதான வழக்கு விசாரணைக்கு வரும் வேளையில் ஜாமீனுக்கு மறுப்பு தெரிவிக்கவேண்டாம் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) முடிவுச்செய்துள்ளது.