சனி, ஜூலை 30, 2011

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்க செயலாளர் எடியூரப்பா!

0 comments



JULY 29, பெங்களூரு: பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., மேலிடத்தின் உத்தரவை ஏற்று நேற்று பதவி விலகினார். தன் ராஜினாமா கடிதத்தை, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு, பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்.

சுரங்கத்தொழில் மோசடி குறித்து, கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அறிக்கை தாக்கல் செய்தவுடன், பா.ஜ., மேலிட அழைப்பின் பேரில், முதல்வர் எடியூரப்பா நேற்று முன்தினம் இரவு, டில்லி புறப்பட்டுச் சென்றார்.  டில்லியில், பா.ஜ., தலைவர்களிடம், தன் நிலைமையை விளக்கினார்.

அவரது கருத்தை, கட்சி மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லை. புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படி தலைமை அறிவுறுத்தியது. நேற்று காலை பா.ஜ., உயர்மட்ட குழு கூட்டம் கூடுவதாக இருந்தது. இந்த கூட்டத்தில், முதல்வர் எடியூரப்பா பங்கேற்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, டில்லியிலிருந்து பெங்களூருக்கு எடியூரப்பா புறப்பட்டு வந்தார்.

தென்மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி அமைய அரும்பாடுபட்ட எடியூரப்பா, கர்நாடகாவின் முதல் பா.ஜ., முதல்வராக பொறுப்பேற்றார். அன்று முதல் பல சிக்கல்களை அவர் எதிர்கொண்டார். ஒவ்வொரு முறையும், மேலிட தலைவர்களின் ஆதரவுடன் அவர் தப்பித்துக் கொண்டே வந்தார். லோக் ஆயுக்தா அறிக்கை வெளியானவுடன், ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காட்டிக் கொள்ள பா.ஜ., மேலிட தலைவர்கள் முடிவு செய்து, எடியூரப்பாவை ராஜினாமா செய்யும்படி கட்டளையிட்டனர்.

எடியூரப்பா, கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள புக்கனகரே என்ற கிராமத்தில், 1943, பிப்., 27ம் தேதி பிறந்தார்.  1970: சிக்கரிபுர் என்ற பகுதியின் ஆர்.எஸ்.எஸ்., பயங்கரவாத அமைப்பின் செயலராக நியமிக்கப்பட்டார். 1972: பாரதிய ஜன சங் அமைப்பின் தாலுகா தலைவராக பதவியேற்றார். 1975: சிக்கரிபுர் நகராட்சி தலைவராக தேர்வானார்.  2010 நவ., : அரசு நிலத்தை மகனுக்கு ஒதுக்கீடு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஜூலை 28: சட்ட விரோதமாக கட்சியினருக்கு நிலக்கரி உரிமம் வழங்கியதாக இவர் மீது, "லோக் ஆயுக்தா' அறிக்கை குற்றம் சாட்டியது. இதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சி உத்தரவிட்டது. குற்றச்சாட்டு: சுரங்க ஊழல் தொடர்பாக, கர்நாடக மாநில அரசிடம் நேற்றுமுன்தினம் அறிக்கை சமர்ப்பித்த லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, "சுரங்க நிறுவனங்களிடம் இருந்து எடியூரப்பா குடும்பத்தினர், 30 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளனர்' என, தெரிவித்தார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், அவர் மீது வழக்குத் தொடரவும் பரிந்துரை செய்தார்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் வெய்ன் பர்னெல்

0 comments




ஜோஹன்ஸ்பெர்க்
 : தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
 இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர்.
மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.

sdpi

0 comments

வெள்ளி, ஜூலை 29, 2011

29 ஜூலை, 2011 சென்னையில் பாப்புலர் ஃப்ர்ண்ட் நடத்திய கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

0 comments

சென்னை: கோவையில் வெடிகுண்டு புரளியை ஏற்படுத்தி அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்திரித்த அன்றைய உளவுத்துறை அதிகாரி ரத்தின சபாபதியை பதிவி நீக்கம் செய்யக்கோரி சென்னை மெமோரியல் ஹால் முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இன்று மாலை சரியாக 3:30 மணி அளவில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

கடந்த 2006 ஆம் ஆண்டு "கோவையை தகர்க்க சதி" என்ற பெயரில் சில வயர்களையும், 4 பேட்டரிகளையும், சில புத்தகங்களையும் வைத்துக்கொண்டு சில இளைஞர்களை தீவிரவாதிகளாக்கி அன்று தமிழகத்தில் சமூக இயக்கமாக செயல்பட்டுகொண்டிருந்த மனித நீதிப் பாசறை (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) வை எப்படியாயினும் ஒழித்துவிட வேண்டும் என்ற துவேஷ எண்ணத்தில் செயல்பட்டார் அன்றைய கோவை மாவட்ட உளவுத்துறை அதிகாரி டி.ஐ.ஜி ரத்தின சபாபதி.

இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து இது ஜோடிக்கப்பட்டு வழக்கு என்று கூறினர். ஆனால் இன்று வரை இவ்வாறு பொய் வழக்கு போட்டு ஒட்டுமொத்த தமிழகத்தையும் பீதிக்குள்ளாக்கிய ரத்தின சபாபதியை தண்டிப்பதை விட்டு விட்டு மேலும் மேலும் பதவி உயர்வைக்கொடுத்து அழகு பார்த்தது அன்றைய தமிழக அரசு.

தற்போது தேர்வாணையக்குழுவின் உறுப்பினராக மேலும் பதவி உயர்வு பெற்று "தன்னை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது" என்ற மமதையில் செயல்பட்டு வருகிறார் ரத்தின சபாபதி. சென்றைய ஆட்சிக்காலத்தில் அநியாயம் நிகழ்த்தப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தரும் வகையில் தமிழக அரசு இன்று பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதே போல் இந்த காவல் துறையில் உள்ள கருப்பு ஆடான "ரத்தின சபாபதி" செய்த கயமத்தனத்தை தமிழக அரசுக்கு தெரிவிக்கும் வகையில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷேக் அன்ஸாரி அவர்கள தலமை தாங்கினார். மாநில துணைத்தலைவரும் விடியல் வெள்ளி பத்திரிக்கையின் ஆசிரியருமான சகோதரர் இஸ்மாயில் மற்றும் எஸ்.டி.பி.ஐ-ன் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி அவர்க்ளும் சிறப்புரை ஆற்றினர். இதில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டாலும் அதனால் ஏற்படுத்திய பாதிப்புகள் ஏராளம் என்பதை சுட்டிக்காட்டினார்கள்.

ரத்தின சபாபதியை டிஸ்மிஸ் செய்வதோடு மட்டுமல்லாமல் அவரை யார் இவ்வாறு செய்யத்தூண்டியது என்பதனையும் விசாரிக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐன் மாநிலத் தலைவர் கேட்டுக்கொண்டார். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர் போராட்டமாகவோ, அல்லது மறியலாகவோ மாறுவது தமிழக அரசின் கையில் தான் உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்கள்.

பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்தின சபாபதியை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இறுதியாக சென்னை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்டின் செயலாளர் சகோதரர் முஹம்மது ஷாஹித் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் – பதிலடி கொடுக்குமா இந்தியா

0 comments


qck_20110728_151828
நாட்டிங்காம்:இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் 196 ரன் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க 2வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் வென்று ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.
சொந்த மண்ணில் போட்டி நடப்பது அந்த அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். பீட்டர்சன், டிராட், பெல், பிரையர், பிராடு ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர் டிரெம்லெட்டுக்கு பதிலாக பிரெஸ்னன் களமிறங்க வாய்ப்புள்ளது. அவருடன் ஆண்டர்சன், ஸ்டூவர் பிராடு வேகக் கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. இந்திய அணி பேட்டிங்கில் முகுந்த், டிராவிட், லஷ்மண், ரெய்னா கணிசமாக ரன் குவித்தாலும் மற்ற வீரர்கள் தடுமாற்றத்துடனேயே விளையாடினர்.
தொடக்க வீரர் கம்பீர் காயம் அடைந்துள்ளதால் அவர் களமிறங்குவதும் கேள்விக் குறியாகவே உள்ளது. அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், முகுந்த் & டிராவிட் ஜோடி இன்னிங்சை தொடங்கும். கம்பீருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் அணியில் இடம் பெறலாம். ஜாகீருக்கு பதிலாக ஸ்ரீசாந்த் அல்லது முனாப்புக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
டிரென்ட் பிரிட்ஜ் ஆடுகளம் ஸ்விங் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஸ்ரீசாந்த் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு அதிகம். லார்ட்ஸ் டெஸ்டில் ஹர்பஜன் சுழல் எடுபடாததால் அவருக்கு பதிலாக அமித் மிஷ்ராவை சேர்ப்பது பற்றியும் இந்திய அணி நிர்வாகம் தீவிரமாக யோசித்து வருகிறது. களமிறங்கும் 11 வீரர்கள் பற்றி போட்டி தொடங்குவதற்கு சற்று முன்புதான் முடிவு செய்யப்படும் என்று கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தொடர்களில் இந்திய அணி முதல் டெஸ்டில் தோற்றாலும், பின்னர் சுதாரித்து விளையாடி தொடரை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது போலவே இங்கிலாந்து தொடரிலும் இந்தியா சாதிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அனுபவ வீரர்கள் சச்சின், டிராவிட், லஷ்மண் கை கொடுத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். நம்பர் 1 அந்தஸ்து பறிபோகும் அபாயம் உள்ளதால், இந்திய வீரர்கள் முனைப்புடன் விளையாடி பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளனர். இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

பாஜக மேலிட உத்தரவு பதவி விலகுகிறார் எடியூரப்பா

0 comments


yediurappa 1
பெங்களூர்:பல ஆயிரம் கோடி சுரங்கத்தொழில் மோசடி குறித்து, கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அறிக்கை தாக்கல் செய்தவுடன், பா.ஜ., மேலிட அழைப்பின் பேரில், முதல்வர் எடியூரப்பா நேற்று முன்தினம் இரவு, டில்லி புறப்பட்டுச் சென்றார். டில்லியில், பா.ஜ., தலைவர்களிடம், தன் நிலைமையை விளக்கினார். அவரது கருத்தை, கட்சி மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லை. புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படி தலைமை அறிவுறுத்தியது.
நேற்று காலை பா.ஜ., உயர்மட்ட குழு கூட்டம் கூடுவதாக இருந்தது. இந்த கூட்டத்தில், முதல்வர் எடியூரப்பா பங்கேற்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, டில்லியிலிருந்து பெங்களூருக்கு எடியூரப்பா புறப்பட்டு வந்தார். அவருடன், அமைச்சர் பசவராஜ் பொம்மை உட்பட சிலர் மட்டுமே வந்தனர்.
பெங்களூரில் தன் இல்லத்தில், பா.ஜ., தலைவர்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். எடியூரப்பா வீட்டில் நடந்த கூட்டத்தில், 30 தலைவர்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது. இதில், ஏழு அமைச்சர்களும், 22 எம்.எல்.ஏ.,க்களும் அடங்குவர். எடியூரப்பா நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்களில் அமைச்சர்கள்  ஷாபா, ரேணுகாச்சார்யா, உதாசி, உமேஷ் கட்டி, பசவராஜ் பொம்மை மற்றும் ஜீவராஜ், கட்டா சுப்பிரமணிய நாயுடு, யோகேஷ் பட், சந்திரகாந்த் பெல்லட், வால்மீகி நாயக், ஆயனூர் மஞ்சுநாத் ஆகியோர் முக்கியமானவர்கள்.
கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, “முதல்வர் வீடு மற்றும் கூட்டத்தை விட்டு அனைவரும் வெளியேறுங்கள்” என்று, டில்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது.
முதல்வர் எடியூரப்பாவை ராஜினாமா செய்யச் சொல்லி மேலிடம் உத்தரவிட்டதையடுத்து, எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்த பலரும், அவரை கைகழுவியதாக தெரிகிறது. இதுவரை எடியூரப்பாவை எதிர்த்து வந்த ரெட்டி சகோதரர்களும், பெல்லாரி எம்.எல்.ஏ.,க்களும், முதல்வர் எடியூரப்பாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர்.
எடியூரப்பா தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்டம் காட்ட முயற்சித்தார். ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. இதனால் அவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் பாஜக தலைவர் கட்காரிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இருப்பினும் வருகிற ஞாயிற்றுக்கிழமைதான் அவர் பதவி விலகவுள்ளதாக பின்னர் தெரிய வந்தது. இதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது.
அதாவது, தனக்குப் பின்னர் சதானந்த கெளடா எம்.பியை முதல்வராக்க வேண்டும், தான் சொல்லும் நபர்களையே அமைச்சர்களாக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்திற்கு நிபந்தனை போட்டுள்ளாராம் எடியூரப்பா. இவை நிறைவேற்றப்படுகிறதா என்பதைப் பார்த்த பின்னர் பதவியிலிருந்து விலகுவது என்ற முடிவில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, இன்று புதிய சட்டமன்ற பாஜக தலைவரை பாஜக தேர்வு செய்கிறது. இதற்காக மேலிடத் தலைவர்களான ராஜ்நாத் சிங் மற்றும் அருண்ஜெட்லி ஆகியோர் பெங்களூர் வருகின்றனர். அவர்கள் பாஜக எம்.எல்.ஏக்களை சந்தித்து புதிய முதல்வர் குறித்து ஆலோசித்து தேர்வு செய்வர்.
தற்போதைய நிலவரப்படி உடுப்பி எம்.பி. சதானந்த கெளடா, அமைச்சர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், சுரேஷ் குமார் உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

முன்னால் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவரிடம் விசாரணை நடத்தப்படும் - என்.ஐ.ஏ

0 comments


இந்திரேஷ் குமார்
பாரளுமன்றத்தில் பருவ மழைக்கூட்டத்தொடர் கூடுவதற்கு முன்பாக மீண்டும் ஒரு அரசியல் புயல் வீச தயாராக உள்ளது. மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவரான இந்திரேஷ் குமாரிடம் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் பற்றி தீவிர விசாரணை செய்வதற்கு  முடிவெடுத்துள்ளது. இந்திரேஷ் குமாரைப்போன்று இன்னும் எத்துனை ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் இது போன்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற உண்மை வெளிவர இருக்கிறது.

இதற்கு முன்பு கடந்த 2007 ஆம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது 14 அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதன் விசாரணையை சி.பி.ஐ போலீசார் ஆர்.எஸ்.எஸ்ன் மூத்த தலைவராக இருக்கும் இந்திரேஷ் குமாரிடம் விசாரணை நடத்தினர். தேசிய புலனாய்வுக்குழு இந்த வழக்கை தீர விசாரிக்க முடிவு செய்துள்ளது.


ஆறு தீவிரவாத தாக்குதல்கள் சம்பந்தமாகவும், மூத்த ஆர்.எஸ்.எஸ்ன் பிரச்சாரகன் சுனில் ஜோஷி கொல்லப்பட்ட விவகாரம் சம்பந்தமாகவும் தேசிய புலனாய்வுக்குழு இந்திரேஷ் குமாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது. சுனில் ஜோஷிதான் பல தீவிரவாத தாக்குதல்களில் நேரடியாக ஈடுபட்டதாகவும், அந்த உண்மைகளை மறைப்பதற்காக சூழ்ச்சி செய்து அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் என்.ஐ.ஏ கூறுகிறது.


சுனில் ஜோஷி
இந்திரேஷ் குமார் எந்நேரத்திலும் விசாரணை செய்யப்படலாம். பல வருடங்களுக்கு முன்னால் இந்திரேஷ் குமார் ஜம்மு காஷ்மீரி ஆர்.எஸ்.எஸ்-ன் ஊழியனாக செயல்பட்டுள்ளார். விசாரணையின் அடிப்படையில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளனர். சுனில் ஜோஷி இரண்டு நபர்களை கடந்த 2006 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு அழைத்துச்சென்று தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்காக பயிற்சி கொடுத்துள்ளான்.

மேலும் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்-ன் தலமையகத்தில் வைத்து இந்திரேஷ் குமாரை சந்தித்துள்ளான். அப்போது இந்திரேஷ் குமார் தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு பணம் கொடுத்துள்ளான். இதன் பின்னர் சுனில் ஜோஷியின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதற்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து இந்திரேஷ் குமார் வெளியேற்றப்பட்டான். சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பிலும், சுவாமி அசிமானந்தா மற்றும் சுனில் ஜோஷியோடு இந்திரேஷ் குமாருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அசிமானந்தாவும் தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்காக சுனில் ஜோஷிக்கு பணம் கொடுத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுனில் ஜோஷி தன்னைப்பற்றி அதிகம் தெரிந்து வைத்திருந்ததற்காகத்தான் இந்திரேஷ் குமார் சுனில் ஜோஷியை திட்டமிட்டு 2007ஆம் ஆண்டு கொன்றுவிட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவைகளை பற்றிய விசாரணையை தீவிர படுத்த தற்போது என்.ஐ.ஏ இந்திரேஷ் குமாரை விசாரிக்க முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய நாட்டில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகளின் விசாரணைகள் முடிவடைந்த போது அவ்வனைத்திலும் இந்துத்துவ தீவிரவாதிகளின் கைவரிசையே உள்ளது. நிரூபிக்கப்படாத பல குண்டு வெடிப்புகளில் இல்லாத அமைப்புகளை தொடர்புபடுத்தி அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதை நிறுத்தி விட்டு சங்கப்பரிவார ஃபாஸிஸ்டுகளை விசார்த்தாலே போதும் இன்னும் பல விதாமான உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தக்க தண்டனை கொடுத்தால் மட்டுமே இது போன்ற தீவிரவாத தாக்குதல்களிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியும்.

அதை விட்டு விட்டு குண்டு வைத்தவனை சுதந்திரமாக உலாவவிட்டுவிட்டு அப்பாவி மக்களை கைது செய்தால், இது போன்ற குண்டுவெடிப்புகள் தொடரத்தான் செய்யும். எத்துனை அரசாங்கங்கள் மாறினாலும் இவற்றை தடுத்து நிறுத்த முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

- முத்து

இந்தியா அரசாங்கமே தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் - ஐ உடனே தடை செய்

0 comments

Quantcast
இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும்  அதற்க்கு காரணம் இந்தியன் முஜாகிதீன் என்றும் .பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்றும் ,ஆந்திர  முஜாகிதீன்கள் என்றும் ,புதிய புதிய முஜாகிதீன்களை உருவாக்கும் இந்தியாவின் முட்டாள் உளவு துறைக்கும் இந்த காங்கிரஸ் அரசாங்கத்திற்கும் ஒரு வேண்டுகோள்
இந்தியாவில் நடைபெற்ற அணைத்து குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் தீவிரவாத இயக்கமான R.S.S  தான் என்பதற்கு ஏராளமான காரணங்களை  திட்டவட்டமாக கூற  முடியும் அதில் முக்கியமானதாகவும்  ஆதரமாகவும் இருக்க கூடியது மாலகானில் பெண் தீவிரவாதி பிரக்யாத்சிங்கால் நடத்தப்பட்ட  குண்டு வெடிப்பு இன்னும் இந்தியாவில் நடைபெற்ற அநேக  குண்டு வெடிப்புக்கு காரணம் நாங்கள் தான் என்று வாக்குமூலம்  அளித்த அசிமானந்த ,ஹைதராபாத் குண்டுவெடிப்பு மட்டும் இன்றி குஜராத் கலவரம், பாபர் மஸ்ஜித்  இடிப்பு , மண்டைகாடு கலவரம் இன்னும் சொல்லிக்கொண்டே போகும் அளவுக்கு இந்த R.S.S தீவிரவாதிகளால் இந்த இந்தியாவில் பல வன்முறைகள் கையாளப்பட்டுள்ளன .
மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்புக்கு பின்னணியில் நின்றது R.S.S தான் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம்  மாவீரன் கர்கறேயின் மரணம் .ஆக இதை போன்று இப்போது மும்பையில்  நடை பெற்ற  குண்டு வெடிப்புக்கு காரணம் R.S.S தான் என்று  திட்டவட்டமாக கூற முடியும்
இந்தியா அரசாங்கத்தால்  இரண்டுமுறை தடை செய்யப்பட்ட இந்த  R.S.S தீவிரவாத இயக்கம் மீண்டும் நிரந்தரமாக  தடை செய்ய பட வேண்டும்

ஆர்.எஸ்.எஸ்ஸின் வெடிக்குண்டு தயாரிப்பு பயிற்சிக்கு ஆதாரம் உள்ளது – திக்விஜய் சிங்

0 comments
          
புதுடெல்லி:ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிப்பதைக் குறித்த முக்கிய ஆதாரம் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.
எல்.கே.அத்வானி தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றிவருகிறார் என திக்விஜய்சிங் குற்றம் சாட்டினார். மும்பை குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவ வாதிகளின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்ற எனது அறிக்கையை சில பத்திரிகைகள் திரித்து வெளியிட்டன.
சங்க்பரிவார தீவிரவாதத்தைக் குறித்த என்னிடம் வீடியோ உள்பட முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரங்கள் உள்ளன. 2002-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவீசியதற்கு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை மத்திய பிரதேச போலீஸ் கைதுச்செய்தது. 2006 ஆம் ஆண்டு நந்தத்திலும், 2008 ஆம் ஆண்டு கான்பூரிலும் வெடிக்குண்டை தயாரிக்கும் வேளையில் ஏற்பட்ட விபத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் சுனில்ஜோஷிதான் மலேகான் வழக்கில் தொடர்புடையவர். அவரை அவரது அமைப்பினரே கொலைச் செய்தனர். இவ்வழக்கின் விசாரணையில் மத்தியபிரதேச அரசு(பா.ஜ.க) தலையிடுகிறது. இவ்விஷயம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் பேசினேன். பின்னர் இவ்விசாரணை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக்குவதாக பா.ஜ.க தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டை திக் விஜய்சிங் மறுத்தார்.
தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றியது எல்.கே.அத்வானி போன்றவர்களாவர். நான் ராகுல்காந்தியின் ஆலோசகர் அல்ல. மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி வகித்தபொழுது ஹிந்து தீவிரவாதத்தையும், முஸ்லிம் தீவிரவாதத்தையும் எதிர்த்து கடுமையாக நடவடிக்கை மேற்கொண்டேன். இவ்வாறு திக்விஜய்சிங் தெரிவித்தார்.

ஹிந்துத்து​வா பயங்கரவாதி​களுக்கு புகழாரம் சூட்டும் நார்வே பயங்கரவாதி​யின் கொள்கை பிரகடனம் – அ​ம்பலமாகும் சர்வதேச பயங்கரவாதம் 27 Jul 2011 8ef29476d6711aa5db7f247fb0f8eea3_full

0 comments
புதுடெல்லி:நார்வேயில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி, இளைஞர்கள் முகாமில் நுழைந்து 76 பேரை கூட்டுப் படுகொலை செய்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதியான ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில்(manifesto) இந்தியாவில் செயல்படும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளான்.
இந்தியாவில் செயல்படும் தேசீயவாதிகள் ஒன்றுப்பட்டு தற்போதைய ஜனநாயக அரசை வீழ்த்தாவிட்டால் இந்தியா அழிந்துபோகும் என ப்ரெவிக் எச்சரிக்கை விடுத்துள்ளான்.
நார்வேயில் தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன்பு ‘முஸ்லிம் எதிர்ப்பாளர்’ என தன்னை சுயமாக அழைத்துக்கொள்ளும் இவன்’ 2080:ஒரு ஐரோப்பிய சுதந்திர பிரகடனம்’ என்ற தனது கொள்கை பிரகடனத்தை ஆன்லைனில் பிரசுரித்துள்ளான்.
பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, எ.பி.வி.பி ஆகிய ஹிந்துத்துவா இயக்கங்களின் இணையதளங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. முஸ்லிம்களை துரத்துவதற்கான உள்நாட்டு போரில் ஹிந்துத்துவா தேசீயவாதிகளுக்கு ப்ரெவிக் தனது ராணுவரீதியிலான ஆதரவை பிரகடனப்படுத்தியுள்ளான்.
1500 பக்கங்களைக் கொண்ட கொள்கை பிரகடன அறிக்கையில் 100க்கும் அதிகமான பக்கங்களை இந்தியாவில் ஹிந்துத்துவா இயக்கங்களைக் குறித்து புகழாரம் சூட்டுவதற்கு ப்ரெவிக் ஒதுக்கியுள்ளான்.
’இந்திய நாடு/ஹிந்து எதிர்ப்பு போராட்டம்’ என்ற தலைப்பின் கீழ் இந்தியாவை ஹிந்து நாடாக மாற்றவேண்டும் என்ற லட்சியத்துடன் வலதுசாரி ஹிந்து தேசீயவாதத்தின் அதாவது ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் அரசியல் கொள்கைகளை காவிமயமாக்கல் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சீக்கிய, புத்த, ஜைன மதங்களைச் சார்ந்தவர்களை ஹிந்துக்களாக மாற்றிவிட்டு இத்தகையதொரு நாட்டை உருவாக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. இத்தகையதொரு லட்சியத்திற்காக பாடுபடும் அமைப்புகள்தாம் சனாதன இயக்கங்கள் அதாவது ஹிந்து தேசீயவாதிகள்.
ஐரோப்பாவை போல முஸ்லிம்களிடமிருந்தும், கலாச்சார மார்க்சிஸ்டுகளிடமிருந்தும் அச்சுறுத்தலை தடுத்துநிறுத்த இவ்வமைப்புகள் ஐரோப்பாவின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்கவேண்டும்.
இந்திய அரசு முஸ்லிம்களை தாஜா செய்து ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதற்கு மிஷனரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் புலம்புகிறான். இந்தியாவுக்கு வெளியே வாழக்கூடிய ஹிந்துக்களுக்கு முஸ்லிம்களிடமிருந்தும் மார்க்சிஸ்டுகளிடமிருந்தும் உருவாகும் அச்சுறுத்தல் குறித்து புரிகிறது என்றாலும் இந்தியாவில் வசிப்பவர்கள் அதைக்குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றார்கள் என ப்ரெவிக் ஆதங்கப்படுகிறான்.
ரகசியமாக ராணுவ பலத்தை பெருக்குவதன் மூலமே ஆட்சியை தகர்க்க முடியும் என்பது ப்ரெவிக்கின் கண்டுபிடிப்பாகும். இதற்காக இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் செயல்படும் வலதுசாரி இயக்கங்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து செயல்படவேண்டும். ஏறத்தாழ ஒரே லட்சியத்திற்காக இரு பிரிவினரும் பாடுபடுகின்றனர். முஸ்லிம் ஆதிக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவேண்டும். தற்போதைய தேசவிரோத சக்திகளிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற 100 ஆண்டுகள் திட்டத்தை ப்ரெவிக் தயாராக்கியுள்ளான்.
லட்சியத்தை அடைவதற்காக இந்தியாவில் ஹிந்துத்துவா வாதிகள், இஸ்ரேலில் யூதர்கள், சீனாவில் புத்தமதத்தவர்கள் ஆகியோருடன் தனது அமைப்பு இணைந்து செயல்படும் என ப்ரெவிக் கூறுகிறான். முஸ்லிம்கள் இந்தியாவில் கோயில்களை கொள்ளையடித்ததாகவும், ஹிந்துக்களை கொலைச் செய்ததாகவும் சில ஹிந்துத்துவ வரலாற்றாசிரியர்களை மேற்கோள்காட்டி ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் குற்றம் சாட்டுகிறான்.
முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை மறுக்கவேண்டும் போன்ற ப்ரெவிக்கின் நெறிமுறைக்கட்டளைகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது சர்சங்க் சாலக்(தலைவர்) எம்.எஸ்.கோல்வால்கரின்  ‘punch of thoughts’ என்ற நூலில் இருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது.
ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணீயம் சுவாமி டி.என்.எ பத்திரிகையில் எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரையிலும் இதே கோரிக்கையை முன்வைக்கிறார்.
இந்தியாவைச் சார்ந்த ஹிந்துத்துவா தலைவர்கள் உள்ளிட்டவர்களின் 8 ஆயிரம் மின்னஞ்சல் முகவரிகளை ப்ரெவிக்கிடமிருந்து போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

வியாழன், ஜூலை 28, 2011

அஸ்சலாமுஅலைக்கும் மல்லிப்பட்டினதில எஸ்டிபிஐ சார்பகா மரக்கன்ரு நடும் விழா

0 comments
  எஸ்டிபிஐ- சார்பக  தமிழ்நாடு முலுவதும் மரக்கன்ரு நடும் விழா சிரப்பானாமுரையில் நடைப்பெருகின்ரது அதில் ஒரு அங்கமகா  மல்லிப்பட்டினதில் எஸ்டிபிஐ சார்பக மரக்கன்ரு நடும் விழாவிர்கனா  கூன்டுகல் தயார்னிலையில் உல்லனா.மரக்கன்ரு நடும் விழாவிர்கன வேலைகல் மும்முரமாகா நடைப்பெற்றூக்கொன்டிருக்கின்ட்ரது.               



  உரிமை:முகம்மது பைசல்









சுதந்திரம் என்பது நமது உரிமை சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் - பாப்புலர் ஃப்ரண்ட்

0 comments
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆகஸ்ட் 15  சுதந்திர அணிவகுப்பு நடத்த இருக்கிறது. இதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யபட்டது .சந்திப்பின் போது மாநில தலைவர் A.S இஸ்மாயில் அவர்கள் கூறியதாவது 



65 வது சுதந்திர தினத்தை கொண்டாடு வதற்கு நாமெல்லாம் தயாராகி வருகின்றோம் .கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தின் பொது பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக சுதந்திரத்தின் நினைவலைகளை நினைவு கூர்ந்து தியாகிகளை கவுரவித்து வருகின்றது இந்த வருடமும் ஆகஸ்ட் 15  நெல்லை மாவட்டத்தில் சுதந்திர அணிவகுப்பு நடத்த தீர்மானித்துள்ளோம் .



சுதந்திர போரில் ஆணிவேராக இருந்தவர்களையும் , போராட்ட களத்தில் உயிர் நீத்த தியாக செம்மல்களையும் நினைவு கூற வேண்டியது , ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை ஆகும் .உடல் வழிகளையும் , உயிர் அர்பணிப்பு களையும் பொருட்படுத்தாது போராடி பெற்ற சுதந்திரத்தை ஆகஸ்ட் 15 ல் மிகுந்த மகிழ்ச்சியோடு உற்சாகதோடும் தேச வளர்ச்சியின் உண்மையான அக்கறை கொண்ட உள்ளதுடன் கொண்டாட வேண்டும் .

இவற்றை வெளிபடுத்தும் நோக்கத்தோடு சுதந்திர முழக்கமிட்டு , வீர நடை போட்டு   பாப்புலர் ஃப்ரண்ட் சீருடை அணிந்து சுதந்திர அணிவகுப்பை கொண்டாடி வருகின்றது .இந்த வருடமும் கொண்டாட இருக்கின்றோம் 

மேலும் இந்திய வளங்கள் நவீன பெயர்களில் அந்நியர்களுக்கு தாரை வார்க்க படுவதும் தேச குடிமக்கள் வேலையின்றி அடிமை குடிமக்களாக மாற்ற படும் அவல நிலைகளும் மாற்றியமைக்க பட வேண்டும் .ஊழல் களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை களும் , கடுமையான தண்டனைகளும் அமலாக்க பட வேண்டும் என்று தனது பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கூறினார்  அப்பொழுது அருகில் மாநில செயலாளர் பைசல் ,மாவட்ட தலைவர் அன்வர் முகைதீன்,மாவட்ட செயலாளர் ஹைதர் அலி , பாளை நகர தலைவர் ஷேக்   முகைதீன் ,மேலபாளையம் நகர தலைவர் மூஸல் காலிம் கலந்து கொண்டனர் .

நன்றி: நெல்லை பாப்புலர் ஃப்ரண்ட்

புறம் பேசுவதன் விபரீதங்கள்!

0 comments
மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு, ஒரு மனிதன் உலகில் மக்களுக்கு மத்தியில் நல்லொழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது. இதே போன்று ஒரு மனிதனை மிக மோசமானவனாகவும் ஒழுக்கம் கெட்டவனாகவும் மாற்றுவதற்கும் இந்த நாவு காரணமாக அமைகின்றது. நாவின் மூலம் செய்யக்கூடிய பாவங்கள் ஏராளமானவை. அவற்றில் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதென்பது சமூகத்திற்கு மத்தியில் முதன்மையாகவே விளங்குகின்றது.
புறம் என்றால் என்ன?
புறம் என்றால் என்ன என்பதற்கு சிறந்த ஒரு வரைவிளக்கனத்தை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
“புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்’ என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ ” என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)” என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
புறம் பேசுவது பெரும்பாவமாகும்!
புறம் பேசுவது பெரும்பாவங்களில் ஒன்றாகும். தொழுகை, நோன்பு, ஜக்காத் இதர நல்லமல்கள் ஒன்றுமே இதற்கு ஈடாகாது! ஒரு மனிதன் வெறுக்கக்கூடிய எதனைப் பற்றிக் குறிப்பிட்டாலும் அது புறம்பேசுவதே ஆகும். உதாரணமாக, குள்ளன், நெட்டையன், குருடன், செவிடன் போன்ற உடல் சார்ந்த அனைத்துமே இதில் அடங்கும். ஒருவனைப் பற்றி அவன் அவ்விடத்தில் இல்லாமல் இருக்கும் போது, அவன் பித்அத்வாதி என்றோ அல்லது தொழாதவன் என்றோ குறிப்பிடுவதும் இதில் அடங்கும். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், ‘நீ கூறுவது அவனில் இருந்தால் அது புறம் பேசுவதாகும்’ என்று கூறினார்கள். இவ்வாறு ஒருவரது குறையை மற்றவர்களிடத்தில் பேசுவது தான் புறம் பேசுதலாகும். அவ்வாறு பேசப்படுகின்ற குறைகள் குறிப்பிட்ட அந்த மனிதரிடம் இல்லையென்றால் அது அவனைப் பற்றிக் கூறிய அவதூறு / இட்டுக்கட்டாகும்.
புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
புறம் பேசுவது சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து அல்லது பேசப்படுகின்ற நபரைப் பொறுத்து தாக்கங்கள் அதிகமாக இருக்கும். ஒருவன் கணவன் மனைவியர்களைப் பற்றி ஒவ்வொருவரிடமும் மாறி மாறி புறம் பேசுகின்ற போது அக்குடும்பத்திற்கு பிரச்சனைகளை அல்லது அக்குடும்பத்தைப் பிரித்து விடும் அளவிற்கு அவன் ஆளாகின்றான். இதனால் அந்த குடும்பமே குட்டிச்சுவராகும் அளவிற்கு சென்றுவிடும். இது ஒரு சாதாரண மனிதனைப் பற்றி புறம் பேசுவதைவிட ஆபத்தானதாகும்.
இதே போன்று ஒரு மார்க்க அறிஞரைப் பற்றி மக்களுக்கு மத்தியில் அவரது தனிப்பட்ட குறைகளைப் பற்றி புறம் பேசுகின்ற போது அவரது மற்ற சிறந்த கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள முன்வர மாட்டார்கள். இதன் மூலம் மக்களுக்கு அவ்வறிஞரின் நேரிய பல கருத்துக்கள் மக்களைச் சென்றடையாமல் அவர்கள் நேரான பாதையை விட்டும் வழிதவறிச் செல்வதற்கும் அவ்வாறு புறம் பேசியவன் காரணமாக அமைந்து விடுகின்றான். எனவே மற்றவர்களின் குறைகளை மக்களுக்கு மத்தியில் பரப்புவதை விட்டும் முற்றாக தவிர்ந்துக் கொள்ள வேண்டும். புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற இத்தகைய விபரீதங்களுக்குத் துணை போகின்றவர்களாக நாம் ஒருபோதும் ஆகிவிடக் கூடாது.
மறுமையில் மிகப்பெரும் நஷ்டவாளியாக நேரிடும்!
புறம் பேசுவது என்பது மேலே குறிப்பிட்டது போன்று இவ்வுலகில் தீய காரியங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ அதே போன்று மறுமையில் நாம் நன்மைகள் பல செய்திருந்தாலும் ஒரு நன்மைக்கூட பயனளிக்காத நஷ்டவாளிகளாக்கிவிடக்கூடிய அளவிற்கு தீமை நிறைந்ததாக இருக்கின்றது. மறுமையில் நஷ்டவாளிகள் யார் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதிவாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
இந்த நபிமொழி மறுமையில் புறம் பேசியவனுக்கு கொடுக்கப்படும் கூலியை தெளிவாகவே கூறுகின்றது. ஒருவன் இவ்வுலகில் எவ்வளவு தான் நற்காரியங்கள் செய்தாலும் அவனது புறம் பேசுதலுக்கு மறுமையில் ஒன்றுமே ஈடாகாது என்பதனையும் நாம் மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். ஆகையால், முதல் காரியமாக நாம் மற்றவர்களின் குறைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து பிறரிடம் கூறி புறம் பேசிய பாவத்திற்கு ஆளாவதை விட்டுவிட்டு நமது குறைகளை அலசி ஆராய்ந்து அவற்றைக் களைவதற்கு முயற்சிக்க வேண்டும். நம்மை நரக வேதனையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பெருமுயற்சி எடுக்க வேண்டும்.
மேலும் புறத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது,
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
நாவைக் கட்டுப்படுத்துவோம்! நாசத்தைத் தவிர்ப்போம்!
நமக்குத் தெரியாத விஷயங்களை விட்டும், அத்தகைய செய்திகளை வதந்திகளாகப் பரப்புவதை விட்டும் நாம் முற்றாக தவிர்ந்துக் கொள்ளவேண்டும். இவர் சொன்னார், அவர் சொன்னார் என்ற வார்த்தைகளை முற்றாகவே தவிர்க்க வேண்டும். சில வேளைகளில் இவ்வாரான வார்த்தைகள் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் பொய் உரைப்பதற்குக் கூட இட்டுச் செல்லும். இதனால் எவ்வித ஆதாரமும் இல்லாத விஷயத்தைக்கூட துளியும் அல்லாஹ்வின் மீது அச்சமில்லாமல் முன்வைக்கக் கூடிய அளவிற்கு ஆளாக நேரிடும். நாம் பேசும் போது அளந்து பேச வேண்டும். நாம் பேசுகின்ற ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது தவறு இருக்கின்றதா? அல்லது பிறரை துன்புறுத்தும் வகையில் நமது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றதா? என்று கவனமுடன் பார்க்க வேண்டும்.
நாம் பேசக் கூடிய அனைத்து விஷயங்களுமே பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன (அல்-குர்ஆன் 50:18)
என்பதை நாம் ஒரு கணமும் மறந்துவிடக்கூடாது.
நாம் பேசுகின்ற விஷயம் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் பதியப்படுகின்றது என்பதை இவ்வசனம் நமக்குத் தெளிவு படுத்துகின்றது. இதனால் நியாயத் தீர்ப்பு நாளில் இவைகள் பரிசீலிக்கப்பட்டு அதற்குத் தக்கவாறு தகுந்த கூலி கொடுக்கப்படும். இதனால் நாம் மிகுந்த கவனமுடன் நடந்துக்கொண்டு நமது நாவைக் கட்டுப்படுத்தி மறுமையில் நஷ்டவாளியாவதை விட்டும் தவிர்ந்துக்கொள்ள வேண்டும்.
நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் பிரயோசனமுள்ளதாகவே இருக்க வேண்டும். பிறரை புறம் பேசும் வார்த்தையாக இல்லாமல் இருக்கவேண்டும். முடிந்தவரைக்கும் நல்லவைகளையே பேசவேண்டும். முடியாவிட்டால் மௌனமாக இருக்க முயலவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)

பள்ளிவாசல் தரைமட்டம்! விழுப்புரத்தில் அயோத்தி!!

0 comments
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ராவுத்த நல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், முஸ்லிம்கள் 40 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.

ராவுத்த நல்லூர் கிராமத்திற்கு அடுத்து புதுப்பேட்டை கிராமம் உள்ளது. இங்கும் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக நவாப் ஆட்சிக் காலத்தில் ராவுத்த நல்லூர் கிராம எல்லையில் ஒரு ஏக்கர் 19 செண்ட் நிலம் ஆற்காடு நவாபினால் நன்கொடையாக வழங்கப்பட்டது.


அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி இரண்டு கிராம முஸ்லிம்களும் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் இரண்டு கிராமத்தின் மையத்தில் புதிய பள்ளி வாசல்கள் உருவாகிவிட்டபடியால் நவாப் பள்ளிவாசலின் பயன்பாடு குறைந்து போனது.

இதனால் அருகிலுள்ள ஆதி திராவிடர் தரப்பினர் அந்த இடத்தின் மீது சொந்தம் கொண்டாடினர். திடீரென்று அந்த இடத்தில் விநாயகர் சிலையையும் வைத்துவிட்டனர். இதனால் புதுப்பேட்டை கிராம முஸ்லிம்கள் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து இரு தரப்பினருக்கிடையே நடந்த சமாதான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் விநாயகர் சிலை அகற்றப்பட்டது. வழக்கும் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் ராவுத்தநல்லூர் முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் நவாப் பள்ளிவாசலை மீண்டும் புனரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக பள்ளிவாசலை போட்டோ எடுத்தனர். இந்த தகவல் ஆதி திராவிடர் தரப்பிற்கு தெரிய வந்ததும் இரவோடு இரவாக நவாப் பள்ளிவாசல் இடிக்கப்பட்டு தரைமட்ட மாக்கப்பட்டது. அந்த இடத்தில் புதிதாக விநாயகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் இடிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் இரண்டு கிராமத்து முஸ்லிம்களும் காவல் நிலையத்தில் முறையிட்டனர்.
காவல்துறையிடம் இரு தரப்பாரும், அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்று முறையிட்டதால் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆதி திராவிடர் தரப்பினர் அந்த இடம் மயானப் புறம்போக்கு இடம் என்றும், மேலும் அந்த இடத்தை புதுப்பேட்டை ஜமாஅத்தினர் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்று விட்டதாகவும் விசாரணையில் தெரிவித்தனர்.

புதுப்பேட்டை ஜமாஅத்தினர் அந்த இடம் வருவாய்த்துறையினரின் பதிவேடுகளில் 1983 வரை பள்ளிவாசல் என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது.
இடையில் மயானப் புறம்போக்கு என்று மாற்றப்பட் டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் பள்ளிவாசலை எதுவும் செய்யக் கூடாது என்றும், அதற்கு பாதை யையும் ஒதுக்கித் தரவும், ஒத்துக் கொண்டு ஆதி திராவிடர் தரப்பினர் உறுதி அளித்திருந்ததாகவும், அந்த வாக்குறுதியை மீறி பள்ளிவாசலை இடித்து விட்டதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும் அந்த இடத்தை ஆதி திராவிடர் எழுதி வாங்கியபோது, "இந்த நிலத்தை ஆதி திராவிடர் பயன்படுத்துவது குறித்து ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பிக் கொடுத்து விடவேண்டும் என்று வாக்குறுதி அளித்திருப்பதையும் சுட்டிக் காட்டினர்.

இறுதியில் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆதி திராவிடர் கொடுத்த பணத்தை புதுப்பேட்டை ஜமாஅத்தினர் திரும்ப கொடுத்து விட வேண்டும்; அந்த நிலத்தின் ஓரமான ஒரு பகுதியை ஆதி திராவிடர் பயன் படுத்திக் கொள்வது என்றும் கடந்த 17ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் முஸ்லிம்கள் அந்த இடத்தில் தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்றும், அதற்கு ஆதி திராவிடர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்த அடிப்படையில் கடந்த 17ம் தேதி முஸ்லிம்கள் அந்த இடத்தில் வழிபாடு நடத்த முயற்சித்தனர். ஆனால் ஆதி திராவி டர்கள் திரண்டு வந்து அவர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் முயற்சி தடுக்கப்பட்டது.

காவல்துறையினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்ததால் அசம்பா விதம் எதுவும் ஏற்படவில்லை.
இதனையடுத்து கடந்த 20ம் தேதி மீண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையில், மாவட்ட ஆட்சியர் மூலமாக வக்ஃபு போர்டுக்கு கடிதம் எழுதி முடிவைப் பெறுவது என்றும், அரசின் மறு உத்தரவு வரும்வரை இரு தரப்பினரும் அந்த இடத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் ஆறு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தையினால் பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்த போதிலும், மீண்டும் எப்போது வெடிக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. ஜமாஅத் முக்கியஸ்தர்கள் இதனால் அமைதியடைந்த போதிலும் முஸ்லிம் இளைஞர்கள் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாகவே குமுறுகின்றனர்.

1. பள்ளிவாசல் இடத்தை விற்பதற்கு ஜமாஅத்திற்கு யார் உரிமை அளித்தது?

2. யாரிடமும் ஆலோசனை நடத்தாமல் ஒரு சிலர் மட்டும் முடிவெடுத்தது இடத்தை விற்பனை செய்தது எப்படி நியாயமாகும்?

3. பள்ளிவாசலை இடித்தவர்களை இன்றைய தேதி வரையில் காவல்துறையினர் கைது செய்யாதது ஏன்?

4. பள்ளிவாசல் இடத்தில் சட்ட விரோதமாக வைத்துள்ள விநாயகர் சிலையை அகற்றாதது ஏன்?

இளைஞர்கள் கேட்கும் இந்தக் கேள்விகளில் நியாயம் இருப்பதை மறுப்ப தற்கில்லை.
அயோத்தி பாபர் பள்ளி வாசல் ஆக்கிரமிப்பிற்கும் - விழுப்புரம் ராவுத்தநல்லூர் நவாப் பள்ளிவாசல் ஆக்கிரமிப்புக்கும் இடையில் சின்ன வித்தியாசம்தான். பாபர் பள்ளிவாசலில் முதலில் சிலை வைத்தார்கள். பிறகு இடித்து தரைமட்டமாக்கினார்கள். நவாப் பள்ளிவாசலை முதலில் தரைமட்டமாக்கி விட்டு பிறகு சிலை வைத்துள்ளார்கள்.

முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளிவாசல் இடத்தில் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கும் காவல்துறை, பள்ளிவாசலை இடித்தவர்கள் துணிவுடன் சுற்றித் திரிந்து வருவதைப் பார்த்துக்க கொண்டு அவர்களை கைது செய்யாமல் அலட்சியம் காட்டி வருகி றது.
முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் இதனை மீட்க வேண்டும். இல்லை யென்றால் சங்கராபுரம் பகுதியில் 40 ஏக்கருக்கும் மேல் வக்ஃபு சொத்துகள் உள்ளன. அவற்றின் நிலையும் கேள்விக் குறியாகி விடும்!

நன்றி:  இப்னு மக்பூல்