புதன், நவம்பர் 09, 2011

சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக குஜராத் ஐ.பி.எஸ் அசோசியேசன் தீர்மானம்...

sanjiv-bhatt_new
அஹ்மதாபாத்:மோடி அரசு சஸ்பெண்ட் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக குஜராத் ஐ.பி.எஸ் அசோசியேசன் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.நேற்று நடந்த கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐ.பி.எஸ் அதிகாரிகளான அதுல் கர்வால், வி.எம்.பர்கி ஆகியோர் அடங்கிய 3 நபர்கள் குழு வீட்டிற்கு வந்து தீர்மானம் நிறைவேற்றிய தகவலை தெரிவித்ததாக சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா தெரிவித்துள்ளார். சத்தியத்திற்கான சஞ்சீவ் பட்டின் போராட்டத்திற்கு அசோசியேசன் பூரண ஆதரவை வாக்குறுதியளித்ததாக அவர் கூறினார்.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்ததாக குற்றம் சாட்டி போலீஸ்காரர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சஞ்சீவ் பட் கைதுச்செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.