வெள்ளி, ஜூலை 29, 2011

ஹிந்துத்து​வா பயங்கரவாதி​களுக்கு புகழாரம் சூட்டும் நார்வே பயங்கரவாதி​யின் கொள்கை பிரகடனம் – அ​ம்பலமாகும் சர்வதேச பயங்கரவாதம் 27 Jul 2011 8ef29476d6711aa5db7f247fb0f8eea3_full

புதுடெல்லி:நார்வேயில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி, இளைஞர்கள் முகாமில் நுழைந்து 76 பேரை கூட்டுப் படுகொலை செய்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதியான ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில்(manifesto) இந்தியாவில் செயல்படும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளான்.
இந்தியாவில் செயல்படும் தேசீயவாதிகள் ஒன்றுப்பட்டு தற்போதைய ஜனநாயக அரசை வீழ்த்தாவிட்டால் இந்தியா அழிந்துபோகும் என ப்ரெவிக் எச்சரிக்கை விடுத்துள்ளான்.
நார்வேயில் தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன்பு ‘முஸ்லிம் எதிர்ப்பாளர்’ என தன்னை சுயமாக அழைத்துக்கொள்ளும் இவன்’ 2080:ஒரு ஐரோப்பிய சுதந்திர பிரகடனம்’ என்ற தனது கொள்கை பிரகடனத்தை ஆன்லைனில் பிரசுரித்துள்ளான்.
பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, எ.பி.வி.பி ஆகிய ஹிந்துத்துவா இயக்கங்களின் இணையதளங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. முஸ்லிம்களை துரத்துவதற்கான உள்நாட்டு போரில் ஹிந்துத்துவா தேசீயவாதிகளுக்கு ப்ரெவிக் தனது ராணுவரீதியிலான ஆதரவை பிரகடனப்படுத்தியுள்ளான்.
1500 பக்கங்களைக் கொண்ட கொள்கை பிரகடன அறிக்கையில் 100க்கும் அதிகமான பக்கங்களை இந்தியாவில் ஹிந்துத்துவா இயக்கங்களைக் குறித்து புகழாரம் சூட்டுவதற்கு ப்ரெவிக் ஒதுக்கியுள்ளான்.
’இந்திய நாடு/ஹிந்து எதிர்ப்பு போராட்டம்’ என்ற தலைப்பின் கீழ் இந்தியாவை ஹிந்து நாடாக மாற்றவேண்டும் என்ற லட்சியத்துடன் வலதுசாரி ஹிந்து தேசீயவாதத்தின் அதாவது ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் அரசியல் கொள்கைகளை காவிமயமாக்கல் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சீக்கிய, புத்த, ஜைன மதங்களைச் சார்ந்தவர்களை ஹிந்துக்களாக மாற்றிவிட்டு இத்தகையதொரு நாட்டை உருவாக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. இத்தகையதொரு லட்சியத்திற்காக பாடுபடும் அமைப்புகள்தாம் சனாதன இயக்கங்கள் அதாவது ஹிந்து தேசீயவாதிகள்.
ஐரோப்பாவை போல முஸ்லிம்களிடமிருந்தும், கலாச்சார மார்க்சிஸ்டுகளிடமிருந்தும் அச்சுறுத்தலை தடுத்துநிறுத்த இவ்வமைப்புகள் ஐரோப்பாவின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்கவேண்டும்.
இந்திய அரசு முஸ்லிம்களை தாஜா செய்து ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதற்கு மிஷனரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் புலம்புகிறான். இந்தியாவுக்கு வெளியே வாழக்கூடிய ஹிந்துக்களுக்கு முஸ்லிம்களிடமிருந்தும் மார்க்சிஸ்டுகளிடமிருந்தும் உருவாகும் அச்சுறுத்தல் குறித்து புரிகிறது என்றாலும் இந்தியாவில் வசிப்பவர்கள் அதைக்குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றார்கள் என ப்ரெவிக் ஆதங்கப்படுகிறான்.
ரகசியமாக ராணுவ பலத்தை பெருக்குவதன் மூலமே ஆட்சியை தகர்க்க முடியும் என்பது ப்ரெவிக்கின் கண்டுபிடிப்பாகும். இதற்காக இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் செயல்படும் வலதுசாரி இயக்கங்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து செயல்படவேண்டும். ஏறத்தாழ ஒரே லட்சியத்திற்காக இரு பிரிவினரும் பாடுபடுகின்றனர். முஸ்லிம் ஆதிக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவேண்டும். தற்போதைய தேசவிரோத சக்திகளிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற 100 ஆண்டுகள் திட்டத்தை ப்ரெவிக் தயாராக்கியுள்ளான்.
லட்சியத்தை அடைவதற்காக இந்தியாவில் ஹிந்துத்துவா வாதிகள், இஸ்ரேலில் யூதர்கள், சீனாவில் புத்தமதத்தவர்கள் ஆகியோருடன் தனது அமைப்பு இணைந்து செயல்படும் என ப்ரெவிக் கூறுகிறான். முஸ்லிம்கள் இந்தியாவில் கோயில்களை கொள்ளையடித்ததாகவும், ஹிந்துக்களை கொலைச் செய்ததாகவும் சில ஹிந்துத்துவ வரலாற்றாசிரியர்களை மேற்கோள்காட்டி ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் குற்றம் சாட்டுகிறான்.
முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை மறுக்கவேண்டும் போன்ற ப்ரெவிக்கின் நெறிமுறைக்கட்டளைகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது சர்சங்க் சாலக்(தலைவர்) எம்.எஸ்.கோல்வால்கரின்  ‘punch of thoughts’ என்ற நூலில் இருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது.
ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணீயம் சுவாமி டி.என்.எ பத்திரிகையில் எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரையிலும் இதே கோரிக்கையை முன்வைக்கிறார்.
இந்தியாவைச் சார்ந்த ஹிந்துத்துவா தலைவர்கள் உள்ளிட்டவர்களின் 8 ஆயிரம் மின்னஞ்சல் முகவரிகளை ப்ரெவிக்கிடமிருந்து போலீஸ் கண்டுபிடித்துள்ளது.